சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

10 ஜூலை, 2013

கனடா இலங்கை மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்!! ராதிகா சிற்சபேசன் கோரிக்கை!



உலகளாவிய ரீதியில் இலங்கையிலிருந்து அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து வாழும் நாடுகளில் கனடா முதலிடம் வகிக்கின்றது. இருப்பினும் இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என நாங்கள் அறிகின்றோம்.
அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் வரை கனடா இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்.
கனடா எப்பொழுதும் மனித உரிமைகள் விடயத்தில் மிகவும் முன்னணியில் திகழும் நாடு என்பதால் கனடா இலங்கை விடயத்திலும் அதை பின்பற்றி இலங்கை மாநாட்டை புறக்கணித்தால், மற்றைய உலக நாடுகளும் இதை முன்மாதிரியாக கொண்டு  புறக்கணிக்கும் என நாம் நம்புகின்றோம்.தற்போது நாம் கனடிய அரசாங்கத்தை கோருவது போல அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழ்கின்ற எமது மக்களும் அந்தந்த நாடுகளிடம் இலங்கையில் நடைபெறுகின்ற பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பற்கேற்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
அத்துடன் ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு அதில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை இலங்கை இதுவரை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. இதனையே பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கனடா உட்பட்ட அனைத்து நாட்டுத் தலைவர்களும்  முன்வைத்திருந்தனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக