சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

15 செப்டம்பர், 2013

கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் 120 கிலோ வெடிமருந்துடன் 13 வருடமாக தரித்து நின்ற லொறி



கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றிலிருந்து 120 கிலோகிராம் நிறையுடைய ரீ.என்.ரீ ரக வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கென பயன்படுத்தப்பட்ட வாகனம் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 1995ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட மேற்படி லொறி, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் இதுவரை காலமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


கடந்த 13 வருடங்களில் இந்த லொறி பாரியளவில் பழுதடைந்து காணப்பட்டதாகவும் இதனை பொலிஸ் நிலையத்திலிருந்து அகற்ற முற்பட்ட போதே மேற்படி வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த லொறியும் அதில் காணப்பட்ட வெடிபொருட்களும் கொழும்பில் பாரியதொரு தாக்குதலை நடத்துவதற்காக கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்

று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக