சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

14 செப்டம்பர், 2013

விடுதலைப் புலிகள் பெண்களை இச்சைக்கு பயன்படுத்தினர் என்று கூறிய சிவகாமி. தமிழர்கள் கண்டனம். ஞான நல்லறம் பேணு நற்குடி பெண்களின் குணங்களாம்" என்பதை அர்த்தமுள்ளதாக்கியது புலிப்படை.

உலகத் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

பெண் புலிகளை இழிவுபடுத்திய சிவகாமி ஐ.ஏ.எஸ்.விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலரான சிவகாமி சமூக சமத்துவப்படை தலைவர்) 13.09.2013 அன்று இரவு 9 மணியளவில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பேசினார். டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்த நால்வருக்கு மரண தண்டனை பற்றிய
விவாதத்தில் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேசும்போது ஈழத்தில் புலிப்படைகளில் இருந்த பெண்களைப் பற்றியும், புலிகள் மீதும் பாலியல் அவதூறுகளை அள்ளித் தெளித்துள்ளார்.நிகழ்ச்சித் தொகுப்பாளர் குணசேகரன் ஆதாரமற்ற தகவல்களை இதுபோன்ற நேரலை நிகழ்ச்சிகளில் சொல்லக் கூடாது என்கிறார். உடன் விவாதத்தில் பங்கு கொண்ட வழக்குரைஞர் அருள்மொழி, திலகவதி ஐ.பி.எஸ், ஆகியோரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
பெண் புலிகளை ஆண்களின் இச்சைக்காகவே படைகளில் பயன்படுத்தினார்கள். இதுபத்திரிகை செய்திகளில் வந்துள்ளது. பாரீசில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் என்னிடம்கூறிய ஒளிப்பட பதிவு இருக்கிறது என்றெல்லாம் கூறியுள்ளார் திரு.சிவகாமி ஐ.ஏ.எஸ். நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், ஞான நல்லறம் பேணு நற்குடி பெண்களின் குணங்களாம்" என்பதை அர்த்தமுள்ளதாக்கியது புலிப்படை.
சமையல்காரியாகவும், துணி துவைப்போராகவும், ஆண்கள் கிண்டல் செய்கையில் தலை குனிந்தவளாகவும், பிள்ளை பெறும் மெசினாகவும், கணவன் விரும்பிய போது சுகமளிக்கும்பாலியல் இயந்திரமாகவும் இருந்த பெண்களின் வரலாற்றில் புரட்சியினை உண்டாக்கிய பெருமை புலிபடைக்கே உரியது.ஈழத்தில் மாலையானதும் பெண்கள் வீட்டிற்கு வெளியே போக கூடாது என்றும்,"வீட்டிற்கு விலக்கு" எனும் அடை மொழியால் பெண்களை மாதவிடாய் காலத்தில் வீட்டின் ஓரத்தில் விலக்கி வைத்திருந்த சமூகத்தில், பெண்களும் துப்பாக்கி ஏந்திக் களமாடும் வல்லமையை உருவாக்கியது புலிப்படை.இலங்கையின் மணலாறு இராணுவ முகாம் மீது 1995ம் ஆண்டு ஜூலை மாதம் பெண் புலிகளால் தனித்து நின்று நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பற்றி உங்களுக்கு தெரியாதா..?
மன்னகுளம் முகாம் மீதான தாக்குதல், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் பற்றி அறியாதவரா..?
ஒரு பெண் காவல் அதிகாரிக்கு துணையாக ஐந்து ஆண் காவலர்கள் காவல் காக்கின்ற
இந்திய நாட்டின் அரசு அதிகாரியாக பணியாற்றியவர்தானே நீங்கள்..?
எப்படி அறிய முடியும் ஈழவிடுதலைக்காக கடலுக்கடியில், பறக்கும் வானில், அடர் வனத்தில் களமாடிய பெண் போராளிகளைப் பற்றி…. உலகத்திலேயே பெண்களை மதிக்கின்ற, மரியாதை செலுத்துக்கின்ற ஒரே ராணுவம்  புலிகளின் ராணுவம். பல அப்பாவி தமிழ் பெண்களும், பெண் புலிகளும் பாலியல் வன் பு/னர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு, சிங்கள ராணுவத்தால் சூறையாடப்பட்டது உலகம் அறிந்த செய்தி. இதுவரை சிங்களவர்கள்  கூட சொல்லத் துணியாத, சொல்ல முடியாத ஒரு அவதூறை பரப்புகின்ற சிவகாமி ஐ.ஏ.எஸ்.,  உலகத் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.இதுபோன்ற போலி  விளம்பரம் தேடிக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக