சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

18 நவம்பர், 2013

கிளிநொச்சி பேரூந்து தரிப்பிடத்துக்கு சென்றவர் காணாமல் போயுள்ளார்--சிவகுமார் பாஸ்கரன்

 
கண்டாவளை, பிரதான வீதியைச்  சொந்த முகவரியாகவும்  உருத்திரபுரம் கூழாவடியில்  வசித்து வந்தவருமான    சிவகுமார் பாஸ்கரன்  (35 வயது மதிக்கத்தக்கவர்)  என்பவர் கட ந்த  2013-11-15  அன்று  காலை  7,00 மணியளவில் காணாமல் போயுள்ளார்.
உருத்திரபுரம் கூழாவடியியிருந்து கண்டாவளைக்கு செல்வதற்காக  கிளிநொச்சி பேரூந்து தரிப்பிடத்துக்கு  சென்றவர்  காணாமல் போயுள்ளார்.
இதுவரை தனது தாயாரிடமோ மனைவியிடமோ குறித்தவர் வந்து சேரவில்லை எனவும் மாகாண சபை தேர்தற் காலத்தின்  போது ஏற்பட்ட பிணக்குகாரணமாக குறித்தவர் காணாமல் போயிருக்கலாம் எனவும் குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக