சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

6 டிசம்பர், 2013

முல்­லைத்­தீவு விகாரையின் காணி உறுதியை ஐ.நா. பிரதிநிதியிடம் காண்பித்த உரிமையாளர்!


முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் வெள்ள முள்­ளி­வாய்க்கால் பகு­தியில் பெளத்த பிக்கு ஒரு­வரின் ஏற்­பாட்டில் அமைக்­கப்­பட்­டுள்ள விகாரை அமைந்­துள்ள ஆத­னத்தின் உரி­மை­யாளர் தனது ஆத­னத்­திற்­கு­ரிய அறுதி உறு­தியை ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்­கு­ழுவின் விசேட அறிக்­கை­யி­ட­லாளர் சலோகா பெயா­னி­யிடம் காண்­பித்து தனது ஆத­னத்தை மீட்­டுத்­த­ரு­மாறு கோரிக்கை விடுத்­துள்ளார்.
அது அறு­தி­யு­று­தியா என வினா­விய ஐ.நா. பிர­தி­நிதி அந்த உறு­தியின் நகல் பிரதி ஒன்­றி­னையும்

பெற்றுச் சென்­றுள்ளார். நேற்றுப் பிற்­பகல் ஐ.நா. சபையின் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் விசேட அறிக்­கை­யி­ட­லாளர் பிர­தி­நிதி முள்­ளி­வாய்க்கால் பகு­திக்குச் சென்ற பொழுது இச்­சம்­பவம் நடை­பெற்­றுள்­ளது.
இவ்­வி­டயம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்­கு­ழுவின் விசேட அறிக்­கை­யி­ட­லாளர் சலோகா பெயானி நேற்று முல்­லைத்­தீவு மாவட்­டத்­திற்கு விஜயம் செய்து முள்­ளி­வாய்க்கால் பகு­தியில் மக்­களைச் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். இச் சந்­திப்பின் போது அண்­மையில் வெள்ளாம் முள்­ளி­வாய்க்கால் பகு­தியில் பௌத்த பிக்கு ஒரு­வ­ரு­டைய ஏற்­பாட்டில் அமைக்­கப்­பட்­டுள்ள விகாரை அமைந்­துள்ள ஆத­னத்தின் உரி­மை­யாளர் கலந்­து­கொண்டு தனது ஆத­னத்­தினை மீட்­டுத்­த­ரு­மாறு ஐ.நா. பிர­தி­நி­தி­யிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.
இதன்­பொ­ழுது குறித்த நபர் தனது ஆத­னத்தின் உறு­தி­யையும் ஐ.நா. பிர­தி­நி­தி­யிடம் காண்­பித்­துள்ளார். இவ்­வி­ட­யத்­தினை கருத்­தி­லெ­டுத்த ஐ.நா. பிர­தி­நிதி குறித்த நப­ரிடம் நீங்கள் காண்­பிக்­கின்ற இந்த ஆவணம் உங்­க­ளு­டைய காணியின் உறு­தியா? எனக் கேட்­டுள்ளார். அதற்கு அவர் அது தனது காணியின் அறுதியுறுதி எனக் காட்டியுள்ளார். அந்த உறுதியின் நகல் பிரதி ஒன்றினையும் ஐ.நா. பிரதிநிதி கோரிப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக