சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

1 பிப்ரவரி, 2013

துருக்கி அமெரிக்கத் தூதரகம் முன்பாக குண்டுத் தாக்குதல்

துருக்கியின் தலைநகரான அங்காறாவிலுள்ள அமெரிக்க தூதரகமானது தகர்க்கப்பட்டுள்ளதாகத் தற்போதய தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியைச் சேர்ந்த ஊடகங்கள் இது ஒரு தற்கொலைக் குண்டுதாரி மூலம் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கருதுகின்றன.

இத்தாக்குதல் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. இத் தாக்குதலில் ஆகக் குறைந்தது ஒருவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகினறது. இத் தாக்குதலானது அமெரிக்கத் தூதரகத்தின் நுழைவாயிலில் நடைபெற்றுள்ளதென தெரியவருகின்றது.
இச் சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவிக்கையில் வெடி நடந்ததும் காயப்பட்ட ஒருவரை பொலிசார் அம்புலன்ஸ் வாகனத்தில் தூக்கி ஏற்றியதாகவும் அப்பகுதி வீதிகள் புகையால் சூழப்பட்டிருப்பதானவும் தெரிவித்திருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக