

மேன்முறையீடு செய்த பொலிஸ் அதிகாரியின் பாதுகாப்பு கருதி அவரது பெயர் திரு ஏ.எஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட இந்த அதிகாரி 2007 ஆம் ஆண்டு வரை பொலிஸ் சேவையில் பணியாற்றியதுடன் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் இருந்து வெளியேறினார். தமிழர்களை கடத்திச் செல்லும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விசேட பிரிவில் இந்த அதிகாரி பணியாற்றியுள்ளார். தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டமை, கொலை செய்யப்பட்டமை அல்லது பாதாள உலக குற்றவாளிகள் தொடர்பான தகவல்களை வழங்கி நபர்கள் பற்றிய தகவல்களை இந்த அதிகாரி கசிய விட்டிருக்கலாம் என அரசாங்கம் சந்தேகம் கொண்டுள்ளதால், தனக்கு ஆபத்து ஏற்படும் என்று இந்த அதிகாரி அச்சம் கொண்டிருந்தார். இதனையடுத்து நாட்டில் இருந்து வெளியேற அவர் தீர்மானித்தார். இலங்கை திரும்பினால் அரசாங்கத்தினால் தான் துன்புறுத்தப்படலாம் என்ற அச்சத்தை அடிப்படையாக வைத்து அவர் புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்தார். எனினும் பிரித்தானிய உள்துறை அலுவலகம் அவரது புகலிடக் கோரிக்கையை நிராகரித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக