சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

18 ஜூலை, 2013

திருக்கிகேதிஸ்வரத்தில் மர்மப்பொருள் வெடித்து இளைஞர் படுகாயம்.


மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் உள்ள வீடொன்றின் பின் பகுதியில் காணப்பட்ட மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து
மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருக்கேதிஸ்வரத்தைச் சேர்ந்த ரீ.கஜேந்திரன் (வயது-25) என்ற இளைஞரே குறித்த மர்மப்பொருள்ள வெடித்து படுகாயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
-நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை மதியம் தனது வீட்டின் பின் பகுதியில் காணப்பட்ட குறித்த மர்மப்பொருளை தொட்ட போது அது வெடித்துள்ளது.
 
உடனடியாக  குறித்த இளைஞர் மன்னார் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.           மேலதிக விசாரனைகளை மன்னார் வைத்தியாலை  பொலிஸார் மேற்கொண்டு வருவகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக