சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

27 ஆகஸ்ட், 2013

இலங்கை சிங்­கள நாடு இங்கு வேற்று இனத்­த­வ­ருக்கு இட­மில்லை.--“நவிப்பிள்ளையல்ல வேலுப்­பிள்­ளையின் சகோ­த­ரி புலிப்பிள்ளையே” – சத்தாதிஸ்ஸ தேரர்


“பிரபாகரனின் தந்தை வேலுப்­பிள்­ளையின் சகோ­த­ரியே இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ளார். இவரின் வரு­கை­யா­னது இலங்­கைக்கு பாத­க­மா­ன­தொரு விளை­வி­னையே நிச்­சயம் ஏற்­ப­டுத்தும்.” என்று இராவணா சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிங்­கள நாடு இங்கு வேற்று இனத்­த­வ­ருக்கு இட­மில்லை. இலங்­கைக்கு பாத­கத்தை ஏற்­ப­டுத்தும் நவ­நீ­தம்­பிள்­ளை­யினை உட­ன­டி­யாக வெளி­யேற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டர்ர.
நவிப்பிள்ளை விடு­தலைப் புலி­களின் ஆத­ர­வாளர் அவர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு புலம்­பெயர் தமி­ழர்­களின் செயற்­பா­டு­களை ஆத­ரிப்­பவர் அவர் பக்­கச்­சார்­பாக செயற்­ப­டு­வதை நாம் ஒரு போதும் ஏற்­றுக்­கொள்­ள­மாட்டோம் என்றும் தேரர் தெரிவித்தார்.
சனல் 4 காணொ­ளி­களைப் பார்த்து விட்டு இலங்கை மீது குற்றம் சுமத்­து­வதை ஏற்க முடி­யாது. அமெ­ரிக்கா பல நாடு­களை ஆக்­கி­ர­மித்­துள்­ளது. ஆப்­கா­னிஸ்­தானில் அமெ­ரிக்­கா­வினால் செய்­யப்­பட்ட படு­கொ­லைகள் தொடர்பில் ஏன் நவி­ப்பிள்ளை குரல் கொடுக்க வில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.
நவ­நீ­தம்­பிள்ளை இலங்­கைக்கு எப்­போது வேண்­டு­மென்­றாலும் வரலாம். அவர் ஓய்­வெ­டுக்க விடு­மு­றை­யினை அனு­ப­விக்க இலங்­கைக்கு வரலாம். ஆனால் இலங்­கையை எதிர்த்து அறிக்கை சமர்ப்­பிக்க அவர் வர முடி­யாது என்றும் இராவணா சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக