சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

30 ஆகஸ்ட், 2013

வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு வென்றால் மீண்டும் நாடு பிளவுபடுவது உறுதி;விமல் வீரவன்ச


வட மாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறும் பட்சத்தில் நாடு பிளவுபடுவது உறுதி . விக்னேஸ்வரன் குறிப்பிட்டதைப்போல் தனித்தமிழ் ஈழம்
உருவாக்கப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார் .
இன்று நாட்டில் சக்திமிக்கதொரு ஆட்சி நடாத்தப்படுகின்றது . இவ்வாட்சியினை கலைத்து மீண்டும் நாட்டில் யுத்தம் உருவாக்கவே எதிர் கட்சிகளும் கூட்டமைப்பும் செயற்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார் .
 
பத்தரமுல்லையில் தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார் .
இதுதொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் வடக்கில் நடக்கும் தேர்தல் நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமானது . இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெற்றி பெற்றால் இலங்கையில் மீண்டும் பிரிவினை வாதமும் யுத்த சூழலும் ஏற்படும் .
 
எமது நாட்டில் பிரிவினைவாதம் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதை புதிதாகக் கூறவேண்டிய அவசியம் இல்லை . கடந்த 30 வருடகாலமாக நாம் அனுபவித்து வந்துள்ளோம் . எனவே வடக்கு மக்கள் தமது நலன்களை கருத்திற் கொள்ள வேண்டும் .
சர்வதேச பிரிவினைவாத சக்திகளுடன் இணைந்து நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி நாட்டில் அமைதியை சீர்குலைக்கவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயலுகின்றது என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் .
நாட்டின் அமைதிக்காக இராணுவ வீரர்கள் தமது உயிர் தியாகங்களை செய்து இழப்புக்களை சந்தித்து பெற்றுக்கொண்ட சுதந்திர இலங்கையில் மீண்டும் புலிக்கொடி பறக்கவிடுவதை நாம் விரும்பவில்லை . இதை சர்வதேச சக்திகளும் புரிந்து கொள்ள வேண்டும் .
இன்று நாடு சக்தி மிக்கதொரு அபிவிருத்திப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது . அதை முடக்கி நாட்டினதும் மக்களினதும் வளர்ச்சியை தடைச் செய்ய மக்கள் இடமளிக்கக் கூடாது எனவே வடமேல் மற்றும் மத்திய பாதுகாப்புசபைத் தேர்தல்களில் எமது ஆட்சியிணை நிலைநாட்டி மீண்டும் நாட்டின் சுயாதீனமானதொரு ஆட்சியினை உருவாக்க வேண்டும் . வடக்கில் உருவாகவிருக்கும் பிரிவினை வாத ஆட்சியினையும் கட்டுப்படுத்த மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார் .
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக