போருக்கு பிந்திய
இலங்கைத்தீவின் சூழலில் தமிழர்களுக்கான சுதந்திரமான அரசியல் வெளி அற்ற
நிலையில் ,இலங்கைத்தீவுக்கு வெளியே தோற்றம் பெற்ற நாடுகடந்த தமிழீழ
அரசாங்கம் , எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் நாளுடன் தனது முதலாம் தவணை அரசவையினை
நிறைவு செய்கின்றது.
இந்நிலையில் இரண்டாம் அரசவைக்கான
பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் , ஒக்ரோபர் 26ம் நாள்
புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறவுள்ளது.
இதற்கான பணிகளை நாடுகடந்த தமிழீழ
அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வரும் நிலையில் , தேர்தல்
தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிக்கைகளை அனைவரும் அறிந்திருக்கும் பொருட்டு
தேர்தல் ஆணையம் இணையத்தளமொன்றினை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
http://tgte-ec.com/ இந்ந
இணையத்தளத்தின் ஊடாக தேர்தல் தொடர்பில் வாக்காளர்களும் வேட்பாளர்களும்
தகவல்களை நாடுவாரியாக தெரிந்து கொள்ள முடியுமென நாடுகடந்த தமிழீழ
அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக