சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

16 அக்டோபர், 2013

தமிழ் மக்களின் விடுதலைக்காக வடக்கு மாகாணசபை உழைக்கும்.வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கன்.

 
தமிழ் மக்களின் விடுதலைக்காக முன்னாள் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரனை முதலமைச்சராகக்
கொண்ட அமைச்சரவையும் எமது வடமாகாண சபையும் கடுமையாக உழைக்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன் என வடமாகாண சபையின் சுகாதாரம் மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ப . சத்தியலிங்கன் தெரிவித்தார் .
வடக்கு மாகாண சபையின் சுகாதாரம் வடமாகாண சபையின் வைத்தியத்துறை அமைச்சராக தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் நேற்று முன்தினம் தனது அமைச்சுப் பதவியை யாழ் . பண்ணை வீதியி லுள்ள அமைச்சின் செயலாளர் அலுவல கத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற் றுக் கொண்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
 
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகை யில் ,
 
இந்த வடக்கு மாகாண சுகாதார அமைச்சானது நாட்டிலுள்ள சகல மாகாண சுகாதார அமைச்சுக்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவதற்கு என்னுடைய முழு உழைப்பையும் ஒத்துழைப்பையும் நல்குவதற்கு நான் தயாராகவுள்ளேன் .
அதற்கு நிச்சயமாக உங்கள் எல்லோருடைய ஒத்துழைப்பும் அனுசரணையும் எமக்குத் தேவையாகவுள்ளது . முன்னைய காலத்தில் ஆளுநரின் ஊடாக இந்த மாகாண த்தில் நிர்வாகம் நடைபெற்று வந்தது . 
எதிர்காலத்தில் மாகாண அமைச்சின் ஊடாகவும் மாகாண சபையின் அனுமதியுடனும் சில காரியங்களை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .
இதனை ஒரு பிரச்சினையாக நீங்கள் கருத வேண்டாம் . இந்த மாகாண அமைச்சும் அமைச்சரவையும் அந்தக் கருமங்களை செய்வதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் .
ஏதாவது தடைகள் ஏற்படின் எந்தவித தயக்கமும் இன்றி என்னுடன் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்ய முடியும் .
அத்தோடு சொந்த விருப்பு வெறுப்புக்களை மறந்து மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சேவை செய்ய அனைவரும் முன்வரவேண்டும் .
மேலும் தமிழ் மக்களின் விடுதலைக் காகவும் மாகாணத்தின் முன்னேற்றத்திற் காகவும் வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை கட்டாயமாக உழைக்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள் கின்றேன் என்றார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக