சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

21 ஜூலை, 2013

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நோர்வே பெண்ணுக்கு டுபாயில் தண்டனை?

deporaபாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நோர்வே நாட்டுப் பெண் ஒருவருக்கு டுபாய் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பில் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்ததாகவும், தற்போது தமக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வேயைச் சேர்ந்த மார்டே டெபோரா டெலிவ் தெரிவித்துள்ளார். டெபோராவிற்கு டுபாய் நீதிமன்றம் பதினாறு மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்தத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தகாத உறவு பேணியதாகவும், மது அருந்தியதாகவும் தெரிவித்து டெபோராவிற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனைக்கு நோர்வே மனித உரிமை அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் இது தொடாபில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் டெபோரா தெரிவித்துள்ளார்.
எனினும், காவல்துறையினர் தமது பணத்தையும் கடவுச் சீட்டையும் பறித்துக் கொண்டு தகாத உறவு பேணியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குத் தொடர்ந்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியவருக்கு 13 மாத கால சிறைத்தண்டனையே விதிக்கப்பட்டது எனவும், அதுவும் பாலியல் தாக்குதலுக்காக அன்றி, தகாத உறவு பேணியமைக்காக இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக