சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

28 ஆகஸ்ட், 2013

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பாடல்.

தன்மானத் தமிழா.......நீ தலை நிமிர்ந்து வாடா!.................
ஈழ மண்மீது அரசாள  உனக்கென்ன தடையா....................... 
எங்களின் உரிமையை வென்றிட வாடா.............................
போராட்ட வடிவம் மாறினாலும் தமிழன் போராட்டம் மாறாது ....................
வீழ்ந்தாலும் விதையாக வீழ்கின்றவன் தமிழன்.......................
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் 26.08.2013 அன்று வவுனியா குருமண்காடு, கலைமகள் விளையாட்டரங்கில் இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுச்சிப்பாடல் இறுவெட்டு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த எழுச்சிப் பாடலானது உள்ளுர் கலைஞர்களாலேயே இயற்றப்பட்டு, இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட பாடலாகும்.
  •  பாடலுக்கான இசை'இசை இளவரசன்' கந்தப்பு ஜெயந்தன்.
  •  பாடலுக்கான வரிகள் 'புரட்சிக் கவிஞன் மாணிக்கம் ஜெகன்.
  •  பாடியவர் 'ஈழத்துப் புயல்' எஸ்.ஜி. சாந்தன்.
பாடலை காணொளி வடிவில்கான இங்கே அழுத்தவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக