சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

2 செப்டம்பர், 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாளை சம்மந்தன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு.

 
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் நாளை 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
வெளியிடப்படவுள்ளது . யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் தலைமையில் இந்த வைபவம் இடம்பெறும் .
 
இவ்வைபவத்தில் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்கினேஸ்வரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் , முக்கியஸ்தர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் .
 
இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல்தீர்வு எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பது தொடர்பிலும் வடமாகாண சபை மூலம் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் மற்றும் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை பாதுகாத்து அதற்கப்பால் செல்வதற்கான முயற்சிகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக