சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

7 செப்டம்பர், 2013

பிரிவினை வாதத்தை தூண்டும் பிரசாரத்த மேற்கொள்ளும் சம்பந்தனை கைது செய் - இல்லையேல் சிங்கள மக்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தும் ஆபத்தான நிலை உருவாகும்

ஸ்ரீலங்காவில் பிரிவினை வாதத்தை தூண்டும் பிரசாரத்த மேற்கொள்ளும் சம்பந்தனை பாராட்டிக் கொண்டிருக்காது உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்குமாறு இனவாத அமைப்பான பொதுபல சேனா எச்சரித்துள்ளது.
சிறையில் அடைக்க தவறும்பட்சத்தில், எதிர்காலத்தில் சிங்கள மக்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தும் ஆபத்தான நிலை உருவாகும் என்று பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் எச்சரிக்கை விடுத்தார்.-
தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சிறிலங்காவில் பிரிவினைவாதத்தை தூண்டும் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள சம்பந்தனை பாராட்டிக் கொண்டிருக்காது உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு என்பது இந்நாட்டின் பிரிக்கப்பட்ட தனி பிரதேசங்கள் அல்ல. அவை சிறிலங்காவின் தன்னாதிக்கத்திற்கு உட்பட்டவை. எனவே சம்பந்தன் சிறிலங்காவை ஆட்சி செய்த ஆங்கிலேயரை போல் நாட்டை வடக்கு கிழக்கு என தனிமைப்படுத்தி பேசுகிறார். அத்தோடு ‘தன்னாட்சி அதிகாரம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச தயார்’ என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். இதன் மூலம் அவர் தலைக்குள் இன்னும் பிரிவினைவாதம் இருப்பது வெளிப்படுகிறது.
30 வருட கால யுத்தம் எமது வாழ்வை அழித்து விட்­டது. அர­சி­யல்­வா­திகள் எடுத்த பிழை­யான தீர்மா­னங்­களால் பல அழி­வு­களை சந்­தித்தோம். பயங்­க­ர­வா­தத்தை அழித்து ஒழித்துக்கட்­டி நாம் தற்போது வெற்றி பெற்­றுள்ளோம்.
தமிழ் மக்களுக்கோ, முஸ்லிம் மக்களுக்கு எதிராகவோ நாம் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதத்தின் பிரிவினைவாத யுத்தத்தையே தோல்வி அடைய செய்தோம்.
இவ்வாறான ஒரு நிலையில் சம்பந்தன் தன்னாட்சி அதிகாரம் தமக்கு தேவை என கூறி­யுள்­ளமை அர­சியல் அமைப்பை மீறும் செய­லாகும். எனவே அவ­ருக்கு பாரா­ளு­மன்­றத்­திற்கு வரும் அரு­கதை இல்லை. அவர் இலங்­கையின் சட்­டத்தை மீறி­யுள்ளார்.
எனவே, சட்­டத்தை மீறிய சம்­பந்­தனை அர­சாங்கம் உட­ன­டி­யாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்­தியா, மொறக்கோ, ஜேர்­மனி போன்ற நாடு­களில் இருந்து இங்கு வந்த முஸ்­லிம்­களும் உரி­மை­களை கேட்கத் தொடங்­கி­யுள்­ளனர்.
இவ்­வாறு தமிழ் முஸ்­லிம்­க­ளுக்கு உரி­மைகள் வழங்­கப்­ப­டு­மானால் சிங்­க­ள­வர்கள் எங்கு போவார்கள். இந்­நிலை தொடருமானால், எதிர்காலத்தில் சிங்களவர்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தும் ஆபத்தான ஓர் நிலைமை உருவாகும்.
எனவே அரசாங்கம் நாட்டையும் சிங்கள மக்களையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இனவாத அமைப்பான பொதுபல சேனா எச்சரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக